Latest Updates View More

ரேன்சம்வேர் அட்டாக் போலவே ஃபயர்பால் அட்டாக் : இந்தியா பாதிக்கப்படுமா?

ஃபயர்பால் அட்டாக் பொருத்தவரை சுமார் 25.3 மில்லியன் கணினிகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. என தகவல் வெளியாகியுள்ளது. பயர்பால்' என்றழைக்க...

Wonder Woman Trailer #4 (2017) | Movieclips Trailers

தேவதை கொடுத்த பரிசு!

நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். ...

வைகாசி விசாகம்.. கன்னியாகுமரி, தூத்துக்குடியில் ஜூன் 7ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 7 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட...

வாய்ப்புண்ணால் அவதிப்படறீங்களா? இதோ உடனடி நிவாரணம்!!

சமீபத்தில் உங்கள் வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் 'வாய்ப்புண்' (MOUTH ULCER) என நாம் அழைக்கிற...

TASTY NO OVEN PIZZA

Egg Curry Recipe | Indian Egg Curry Recipe

CookingView More

HealthView More

TrailersView More

PhotosView More

StoryView More

TechView More

OtherView More

ரேன்சம்வேர் அட்டாக் போலவே ஃபயர்பால் அட்டாக் : இந்தியா பாதிக்கப்படுமா?

ஃபயர்பால் அட்டாக் பொருத்தவரை சுமார் 25.3 மில்லியன் கணினிகள் உலகளவில்
பாதிக்கப்பட்டுள்ளன. என தகவல் வெளியாகியுள்ளது. பயர்பால்' என்றழைக்கப்படும்
புதிய தீம்பொருளுக்கு இந்தியா பாதிப்புற்றிருக்கிறது என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீன நிறுவனத்தால் தொடங்கப்பட்டது என சில
வதந்திகள் தெரியவந்துள்ளன
இதில் 25.3 மில்லியன் பாதிக்கப்பட்ட கணினிகளுடன் இந்தியா மோசமாக
பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பின்தொடர்ந்து
பாதிக்கப்பட்ட சில நாடுகள் பொருத்தமாட்டில் பிரேசில் (24.1 மில்லியன்),
மெக்சிகோ (16.1 மில்லியன்), இந்தோனேசியா (13.1 மில்லியன்) மற்றும்
அமெரிக்கா (5.5 மில்லியன்) ஆகியவை அடங்கும். பெய்ஜிங் சார்ந்த டிஜிட்டல்
மார்க்கெட்டிங் நிறுவனம் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என
கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோப்புகளை பாதிக்கும் வண்ணம் உள்ளதாக
ஃபயர்பால் அட்டாக். உலகளாவிய ரேன்சம்வேர் சைபர் தாக்குதலானது 200,000
க்கும் அதிகமான கணினிகளை பாதித்தது. இந்தியா உட்பட குறைந்தது 150 நாடுகளில்
விண்டோஸ் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. தற்போது இந்த ஃபயர்பால் தாக்குதல்
சீன மொழி பேசும் குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டது,

Wonder Woman Trailer #4 (2017) | Movieclips Trailers

தேவதை கொடுத்த பரிசு!

நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.

அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

""நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.

""அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ்.

""இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.

""இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.

பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.

""மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.

""தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

""என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.

""நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.

பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள்.

இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.

இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.

வைகாசி விசாகம்.. கன்னியாகுமரி, தூத்துக்குடியில் ஜூன் 7ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 7 ஆம் தேதி கன்னியாகுமரி
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்
திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்
முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அன்றைய தினம் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால்
சம்பந்தபட்ட மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய
பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது.

இந்த விடுப்பு செலவாணி முறிவுச் சட்டத்தின் படி பொது விடுமுறை நாள் அல்ல
என்பதால் ஜூன் 7ல் உள்ளூர் விடுமுறைக்கு பதில் ஜூன் 10ம் தேதி இரண்டாம்
சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி
மாவட்டத்துக்கு ஜூன்.7 உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்
மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ஜவான்.

வாய்ப்புண்ணால் அவதிப்படறீங்களா? இதோ உடனடி நிவாரணம்!!

சமீபத்தில் உங்கள் வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் 'வாய்ப்புண்' (MOUTH ULCER) என நாம் அழைக்கிறோம். காரணம்? உங்கள் உடம்பு சம நிலையற்று மலச்சிக்கல், அசிடிட்டி, சத்து பற்றாக்குறை, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வர வாய்ப்பாகவும் இருக்கிறது. வாய்ப்புண் தோன்ற மற்ற சில முக்கிய காரணங்களாக உடல் உஷ்ணமும், அதிகம் புகைப்பிடிக்கும் பழக்கமும், மனஅழுத்தமும், உங்கள் பற்களை பாதுகாக்க தவறுவனவும் இருக்கிறது. இந்த புண்ணால் ஏற்படும் வலிக்கு எத்தகைய மருந்துகளும் வேண்டியதில்லை என்கின்றனர். இந்த வலி உங்களுக்கு இரண்டு நாட்களும் தொடரும்...சில சமயங்களில் ஒரு வாரம் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதாம். அதிகமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் அல்சர் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுகிறது. நீங்கள் உபயோகிக்கும் டூத்பேஸ்டில் சோடியம் லாரில் சல்பேட் இருக்குமாயின்..கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்புண் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது


இது உங்கள் வாய்களில் வெள்ளை அல்லது சிவப்பு நிற திட்டுகளை உண்டாக்ககூடியதாகும். ஆயுர்வேதத்தின்படி, உடம்பில் இருக்கும் அதிக உஷ்ணத்தால் வாய்ப்புண் ஏற்படுகிறது . இந்த அதிக உஷ்ண நிலை அல்லது B12 வைட்டமின் குறைபாடுகளால், நம் வாய் தான் முதலில் பாதிக்கப்படுகிறதாம். உங்கள் நாக்கின் நடுபுறத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால்...உங்களுடைய உடம்புக்கு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் தேவை என அர்த்தமாகும். உங்களுடைய நாக்கு, தட்டான் நாக்காக (Scalloped Tongue) இருந்தால், ஈர்களில் இரத்தம் வடிந்துகொண்டே இருக்கிறது. அப்படி என்றால், நமக்கு போலிக் அமிலம், வைட்டமின் C, பையோபிளேவோனாய்ட்ஸ் தேவைப்படுகிறது என அர்த்தமாகும். வாங்க. அவற்றை குணமாக்கிற வழியை பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 
சமையல் சோடா: இது பேக்டீரியாவை அழிக்க உதவுவதுடன், புண்ணையும் போக்குகிறது. இது எரிச்சலை குறைக்கசெய்யவும் உதவுகிறது. மேலும் இது கிருமிகளையும், பாக்டீரியக்களையும் அழிக்கிறது 1 டீ ஸ்பூன் சமையல் சோடாவை ½ கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும். ஆம், கழுவும் பொழுது...தண்ணீரினை உங்கள் வாயின் நாளாப்புறமும் சுழற்றி, கொண்டுசென்று அதன் பின் துப்புவது மிகவும் முக்கியம். இதேபோல் ஒரு நாளைக்கு இரணடு முறை செய்து வர உங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

துளசி இலைகள்: துளசி இலையை மென்றுவர...உங்கள் வாய்ப்புண் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். முதலில் துளசி இலையை நன்றாக மென்று அதன் பின் தண்ணீர் குடிக்க உங்கள் பிரச்சனை நீங்கும். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை, பல பிரச்சனைகளுக்கு தீர்வாக நமக்கு அமைகிறது. ஒரு நாளைக்கு 3லிருந்து 4 முறை சில துளசி இலைகளை மென்று அதன் பின்னர் தண்ணீர் குடித்துவர, வாய்ப்புண் பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.
 
 
தேன்: உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து...பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும். உங்களுக்கு உடனடி நிவாரணம் டைக்கவேண்டுமென்றால்...மஞ்சளை தேனுடன் கலந்து தேய்க்க வேண்டும்






மோர்: மந்திர மூலப்பொருளான இந்த மோர், புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. இந்த மோரில் லாக்டிக் அமிலம் இருப்பதுடன், இயற்கையிலே சற்று அமிலமும் கலந்துள்ளது. இது புண்ணால் ஏற்படும் வலியை குறைக்க வல்லது.
 
 
 
 
 
 
சீமைச்சாமந்தி: இந்த மலர் கிருமி நாசினி பண்புகளை கொண்ட ஒரு மலராகும். பொதுவாக வாயை கொப்புளிக்க பயன்படுத்தபடும் இந்த மலர், வாய்ப்புண்ணையும் ஆற்ற வல்லது. உங்கள் கைகள் நிறைய சீமைசாமந்தி மலர்களை எடுத்துகொள்ளுங்கள். அதனை தண்ணீரில் போட்டு...ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயை கழுவி வாருங்கள். இதன் பண்புகள் வாய்ப்புண்ணை நீக்கி வாய்பிளந்து ஆச்சரியத்துடன் உங்களை நிற்க வைக்கும்.